அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்றுவரும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், வரும் சனிக்கிழமை சென்னை திரும்புகிறார்.
குரல் மற்றும் உடல்நிலை பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி அமெரிக்கா சென்றிருந்தார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். தற்போது இரண்டு மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், அனைத்து மேல் சிகிச்சைகளும் முடிந்து பூரண நலம் பெற்று வரும் 16-ம் தேதி சனிக்கிழமை சென்னை திரும்புவதாக, தே.மு.தி.க தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் வரும் பொதுத்தேர்தலுக்கான கூட்டணி முடிவுகள் தீவிரமாகியுள்ள நிலையில், விஜயகாந்த் விஜயம் செய்தவுடன் இன்னும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவிர, தங்கள் தலைவர் சிகிச்சை முடிந்து திரும்புவது தே.மு.தி.க-வினரிடையே புதுவித உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.