திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வரும் 30ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
திமுக ஈரோடு மண்டல மாநாடு 24,25 ஆகிய தேதிகள் நடந்தது. மாநாட்டில் 5 கோஷங்களை மு.க.ஸ்டாலின் முன் வைத்துள்ளார். தமிழக அரசியலில் பரபரபான சூழலலில் அவசர செயற்குழு கூடுகிறது.
கடந்த பிப்ரவரி 19ம் தேதி காவிரி பிரச்சினை தொடர்பாக சுப்ரிம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் படி, யாரும் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது. அதே நேரத்தில் 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதையடுத்த தமிழக அனைத்து கட்சியினரும், விவசாய சங்கங்களும் கூடி தீர்மானம் போட்டனர். அதன்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தீர்மானம் போட்டனர். பின்னர் தமிழக சட்டசபையிலும் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
சுப்ரிம் கோர்ட் உத்தரவிட்ட 6 வார காலம் என்பது இம்மாதம் 30ம் தேதியோடு முடிவடைகிறது. இந்நிலையில் மாற்று ஏற்பாடாக, 9 பேர் கொண்ட குழுவை அமைக்க முயற்சித்து வருகிறது. இந்த சூழல் குறித்து விவாதிக்க திமுக அவசர செயற்குழு கூட்டம் 30ம் தேதி நடைபெறுகிறது. காவிரி விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.