வேலூர்:
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஏற்கனவே 2-முறை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஜனவரி 4 ஆம் தேதி மேல்விஷாரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தற்போது மீண்டும் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இது அவரது ஆதரவாளர்களிடையேயும், தி.மு.க. தொண்டர்கள் இடையயேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லவரான துரைமுருகன் மருத்துவமனையில் அடிக்கடி அனுமதிக்கப்படுவது திமுக தலைவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"