தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா மற்றும் சட்டப்பேரவை வைர விழா, திமுக சார்பில் நாளை சென்னையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கேரள முதல்வர் பிரனாயி விஜயன் உட்பட பல் முக்கிய தேசிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில், சட்டப்பேரவை வைர விழா மலரை கருணாநிதியிடம் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் காண்பித்தார். ஒவ்வொரு பக்கங்களாக ஸ்டாலின் காட்டியபோது, கருணாநிதி அதனைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது, கழுத்தில் கிடந்த துணியை எடுத்து தனது வலது கையால் வாயை துடைத்தார் கருணாநிதி. இருப்பினும், நாளை நடைபெறும் வைர விழா நிகழ்வில் கருணாநிதி பங்கேற்கமாட்டார் என ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.