திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்டு சென்றார்.
மு.க.ஸ்டாலின் நேற்று(9.7.18) இரவு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் சென்றார். அங்குள்ள பன்னாட்டு முனையத்தில் இருந்து துபாய் வழியாக லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், நேற்று முடிவு பெற்ற நிலையில், மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினும் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றனர்.லண்டனில் ஒரு வாரம் தங்கியிருந்துவிட்டு இருவரும் சென்னை திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, தமிழகத்திற்கு பல திட்டங்களை மத்திய அரசு தந்துள்ளதாக அமித்ஷா பேசியிருப்பது குறித்து கேட்டதற்கு ‘நான் அவர் பேசியதை பார்க்கவில்லை’ என கூறியபடி ஸ்டாலின் சென்றார்.