Advertisment

கோர்ட் தீர்ப்புக்கு பின் முக்கிய முடிவு : ஸ்டாலின் தகவல்

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்க திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mla s meeting - stalin

6.30 மணி : திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நிருபர்களை சந்த்தார். அப்போது, ’’நாளை கோர்ட்டில் என்ன தீர்ப்பு வருகிறது என்பதை பார்த்துவிட்டு, அதன் பின்னர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

Advertisment

6.20 மணி : திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிவடைந்தது.

6.00 மணி : கவர்னர், முதல்வர், சபாநாயகர் ஆகியோரின் ஜனநாயகவிரோத செயலுக்கு கண்டனம். அரசு விழாவை அரசியல் மேடையாக்க அனுமதித்த தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு கண்டனம் என இரண்டு தீர்மானம் நிறைவேற்றம்.

5.45 மணி : திமுக எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தால் அரசுக்கு நெருக்கடி ஏற்படுமா? திமுகவுக்கு இழப்பு ஏற்படுமா? என்றும் விவாதம் நடைபெற்றதாக தகவல்.

5.30 மணி : தற்போதைய அரசியல் சூழல் குறித்து திமுக எம்.எல்.ஏ.க்களின் கருத்துக்களை சொல்லுமாறு மு.க. ஸ்டாலின் சொல்ல, எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக கருத்துக்களை சொல்லி வருகின்றனர்.

5.20 மணி : 80 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டதாக அதிகாரபூர்வமல்லாத தகவல் தெரிவிக்கிறது.

5.15 மணி : திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முக ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்க திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்க உள்ளது.

ஆளும் அ.இ.அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், பிளவு ஏற்பட்டது. சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஓரணியாகவும் செயல்பட்டனர். சசிகலா தரப்பில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்தனர். ஒரு கட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தது. சசிகலா சிறையில் இருக்கும் நிலையில் டிடிவி தினகரனை தனித்து விட்டதோடு, அவரை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கும் வேலைகளும் நடந்தது.

இதை அவர் கடுமையாக எதிர்த்தார். அவருடைய ஆதரவாளர்கள் 19 எம்.எல்.ஏ.க்களுடன் போர்கொடி தூக்கினார்.முதல்வரை மாற்ற வேண்டும் என கவர்னரிடம் கடிதம் கொடுத்தார். இதையடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கவர்னரை சந்தித்து, அதிமுக ஆட்சி பெரும்பான்மை இழந்துவிட்டது. எனவே பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிருப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று மனு கொடுத்தார். ஆனால் கவர்னர் அது அவர்களின் உள்கட்சி பிரச்னை. அதில் தலையிட முடியாது என்று சொன்னார்.

இதையடுத்து, அரசு பெரும்பான்மையை நிருபிக்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டி மனு செய்தார், ஸ்டாலின். இந்நிலையில் சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்காவை எடுத்து வந்த திமுகவினர் மீது உரிமை மீறல் குழு விசாரணையை நடத்தியது. இதன் மூலம் திமுகவினர் 21 பேர் மீது நடவடிக்கை எடுத்து, நம்பிக்கை தீர்மானத்தைக் கொண்டு வர அதிமுக முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் டிடிவி தனகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் ஜனநாயக படுகொலை என எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்து விவாதிக்க, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை ஸ்டாலின் கூட்டுவதாக அறிவித்தார். இதையடுத்து திமுகவின் 89 எம்.எல்.ஏ.க்களும் சென்னைக்கு இன்று காலை வந்து சேர்ந்தனர்.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 4 மணி முதலேயே திமுக எம்.எல்.ஏ.க்கள் வர ஆரம்பித்தனர். ஸ்டாலின், துரைமுருகன் போன்ற மூத்த உறுப்பினர்கள் இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் வந்ததும், கூட்டம் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

M K Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment