திமுக மாணவரணி செயலாளராக கடலூர் இள.புகழேந்தி இருந்தார். அப்பதவியில் இருந்து அவரை நீக்கிவிட்டு, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வழக்கறிஞரான அவர், தற்போது காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவருடைய தாத்தா அண்ணாமலை, அண்ணாதுரை அமைச்சரவையில் மந்திரியாக இருந்தார்.
இவரைப் பற்றிய விபரங்களை அறிய http://kanchimlaezhil.com/ இணையதளத்தைப் பார்க்கலாம்.