எம்.எல்.ஏ.சரவணனின் கூவத்தூர் பேரம் தொடர்பான வீடியோ தான் தற்போதைய தமிழக அரசியலின் ஹாட் டாபிக். இதை காரணமாக வைத்தே, மீண்டும் சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் புகார் அளித்திருக்கிறார்.
இந்த நிலையில், அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பதே இன்று வரை தெரியாமல், ரஜினியை வைத்து பட்டிமன்றங்கள், விவாத மேடைகள், ஆவேச பேச்சுக்கள் என வளைய வந்துக் கொண்டிருக்கின்றன. அவரும், போரை கிளப்பிவிட்டு விட்டு 'சிக்குவனா' என்ற ரீதியிலேயே சென்றுக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், எம்.எல்.ஏ.சரவணனின் விவகாரம் குறித்து, ரஜினியிடன் இன்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரஜினி, "அரசியல் குறித்து நான் பேச விரும்பவில்லை" என்றார். மேலும், "இன்று அர்ஜுன் சம்பத் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது" என்று தெரிவித்துள்ளார்.