Advertisment

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு: அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் - தி.வி.க போலீஸ் கமிஷனரிடம் புகார்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் காவல்துறைக்கே தெரியாத தகவல்கள் அண்ணாமலையிடம் இருப்பதால், காவல்துறை அவரை விசாரிக்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு: அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் - தி.வி.க போலீஸ் கமிஷனரிடம் புகார்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் காவல்துறைக்கே தெரியாத தகவல்கள் அண்ணாமலையிடம் இருப்பதால் அவரிடம் காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோவையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

Advertisment

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மதக்கலவரத்தை தூண்டும் பாஜக தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ஆம் தேதி கார் வெடி விபத்து நடந்தது தொடர்பாக கருத்து தெரிவிப்பதாக மதக்கலவரத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

மேலும் இந்த புகாரில், கோவை மாநகர காவல்துறை வெடி விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் இந்த வெடி விபத்து சம்பவத்தை வைத்து பாஜக தலைவர் அண்ணாமலை விஷமத்தனமான பிரச்சாரம் செய்து வருகிறார் எனவும் புகாராக குறிப்பிட்டிருந்தனர்.

இதைத்தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநகர செயலாளர் நிர்மல் குமார் கூறியதாவது:

வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து அண்ணாமலை மதக் கலவரம் செய்து அரசியல் செய்ய பார்க்கிறார். இப்படி வெடி விபத்து தொடர்பாக சாதாரண நபர் பேசி இருந்தால் போலீசார் அவரை விசாரணை கைது என்று நடவடிக்கை மேற்கொண்டு இருப்பார்கள். ஆகவே தமிழக அரசு அண்ணாமலையை விசாரணை செய்ய வேண்டும்.

காவல்துறைக்கே தெரியாத தகவல்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவிக்கிறார் அண்ணாமலை. இப்படி தகவல் தெரிந்தே காவல்துறைக்கு தெரிவிக்காமல் இருப்பதற்கே முதலில் அவரை கைது செய்ய வேண்டும்” என்று நிர்மல் குமார் கூறினார்.

செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment