Advertisment

பிரெஞ்சு தூதரகம் அருகே பறந்த டிரோன்கள்; புதுச்சேரியில் பரபரப்பு

பிரெஞ்சு தூதரகம் அருகே இன்று காலை 8 மணியளவில் சுமார் 20 நிமிடங்களாக இந்த 2 கட்டிடங்களுக்கு மேலேயே 2 டிரோன் கேமராக்கள் வட்டமிட்டுள்ளது

author-image
WebDesk
New Update
drone

புதுச்சேரி பிரெஞ்சு தூதரகம் அருகே பறந்த 2 டிரோன்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

புதுச்சேரி கடற்கரை சாலையை ஒட்டிய பகுதியில் தலைமை செயலகம், கவர்னர் மாளிகை, டி.ஜி.பி அலுவலகம், சட்டசபை வளாகம், அரசு பொதுமருத்துவமனை உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்: ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் போட்டியிடும்; கே.எஸ். அழகிரி உறுதி

இதன் அருகே பிரெஞ்சு தூதரகம் உள்ளது. இதனிடையே இன்று காலை 8 மணியளவில் சுமார் 20 நிமிடங்களாக இந்த 2 கட்டிடங்களுக்கு மேலேயே 2 டிரோன் கேமராக்கள் வட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரெஞ்சு தூதரக காவலர் பெரியகடை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தப்போது அங்கு பறந்து கொண்டிருந்த 2 டிரோன் கேமராக்களும் மாயமாகிவிட்டது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி: பாபு ராஜேந்திரன்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment