Advertisment

வாட்ஸ் அப் மூலமாக தமிழ் வழியில் எம்.பி.பி.எஸ் பயிற்சி: அசத்தும் தமிழக மருத்துவ பேராசிரியர்கள்

தமிழ் வழிப் பள்ளிகளில் படித்த முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த மூத்த மருத்துவ வல்லுநர்கள் ஒரு தன்னார்வக் குழு அமைத்து எம்.பி.பி.எஸ்., பாடப்புத்தகங்களை தமிழில் கற்பிக்க ஆரம்பித்தார்கள்.

author-image
Janani Nagarajan
New Update
வாட்ஸ் அப் மூலமாக தமிழ் வழியில் எம்.பி.பி.எஸ் பயிற்சி: அசத்தும் தமிழக மருத்துவ பேராசிரியர்கள்

தமிழினி துணைவன் வாட்ஸ்அப் குரூப்பில் கற்பிக்கும் டாக்டர் சுபாஷ் காந்தி

அக்டோபர் 16 அன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவிலேயே முதன்முறையாக போபாலில் இந்தியில் எம்.பி.பி.எஸ்., படிப்பைத் தொடங்கினார். இது கல்வித் துறையின் "மறுமலர்ச்சி மற்றும் மறுகட்டமைப்பின் தருணம்" என்று விவரித்தார்.

Advertisment

ஆனால், அதற்கு முன்பே தமிழ் வழிப் பள்ளிகளில் படித்த முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த மூத்த மருத்துவ வல்லுநர்கள் ஒரு தன்னார்வக் குழு அமைத்து எம்.பி.பி.எஸ்., பாடப்புத்தகங்களை தமிழில் கற்பிக்க ஆரம்பித்தார்கள்.

publive-image

தமிழ்நாடு பொது சுகாதார அதிகாரி டாக்டர் சுபாஷ் காந்தி (வயது 41) கூறுகையில், “'தமிழினி துணைவன்' என்ற எங்களது குழு பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 350 முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 107 வகுப்புகளை கற்பித்து வருகிறோம்.

இது நடைமுறைகளுக்கான நேரம், அடுத்த பேட்ச் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு நாங்கள் அவர்களுக்கான தேர்வுகளை நடத்தி தேர்ச்சிபெற்ற வைக்க உதவுகிறோம்," என்று காந்தி கூறுகிறார். அவர் ஒரு தமிழ் நடுத்தர பள்ளியின் மாணவராக இருந்தபோது சந்தித்த சவால்களின் விளைவாக, தற்போது வாட்ஸ்அப்பில் கற்பிப்பதற்கு குரூப் ஒன்றை நிறுவியுள்ளார்.

“தமிழ்வழிப் பள்ளியாக இருந்ததால், எம்.பி.பி.எஸ்., படிப்பது எனக்கு ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. பின்னர், நான் ICMR-இல் பொது சுகாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றேன். மேலும், பிரிட்டிஷ் மருத்துவ கவுன்சில் இதழில் ஒரு கட்டுரையை வெளியிட்டேன்.

"இந்த திட்டத்தை நாங்கள் செயல்படுவதற்கு முக்கிய காரணம், மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதை முக்கியத்துவப் படுத்தாமல், மருத்துவக் கல்வியில் யோசனை மற்றும் கருத்தைப் பெற உதவவும், அவர்களைத் தங்கள் தாய்மொழியில் தொடர்ந்து சிந்திக்க உதவவும் செயல்படுகிறோம்.

அடிப்படை வாக்கியங்களை புரிந்துகொள்ளவும், எளிய ஆங்கிலத்தில் எழுதக் கற்றுக்கொடுக்கவும், ஒரு வழக்கை எவ்வாறு முன்வைப்பது அல்லது ஒரு காட்சியை விளக்குவது பற்றி அவர்களுக்கு நாங்கள் உதவுகிறோம், ”என்று அவர் கூறினார்.

மத்தியப் பிரதேசத்தில் இந்தியில் மருத்துவப் பாடங்களை கற்பிப்பதை போல, எம்.பி.பி.எஸ்., திட்டத்தைத் தமிழில் கற்பிப்பதற்கான அடித்தளத்தை அவர்களது குழு மேற்கொள்கிறது என்று காந்தி கூறுகிறார்.

மேலும், “தமிழ் அல்லது இந்தியில் எம்.பி.பி.எஸ்., திட்டத்தை உருவாக்குவது, அந்த பாடப்புத்தகங்களை மொழிபெயர்ப்பதற்காக அல்ல. ஸ்பானிய மொழி அல்லது பல ஐரோப்பிய மொழிகள் நவீன அறிவியலுக்கான போதுமான அறிவியல் சொற்களை கொடுத்திருக்கிறது. சொற்கள் மற்றும் பயன்பாடுகள் இந்திய மொழியில் உள்ளதா என்பதும் கூட, உள்ளூர் மொழிகளின் பரிணாம வளர்ச்சியை நாடியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் பயன்படுத்தப்படும் இந்தி மொழியில் உள்ள எம்.பி.பி.எஸ்., பாடப்புத்தகங்களில் சிலவற்றைப் பார்த்தேன், அதே ஆங்கிலச் சொற்கள் இந்தியில் எழுதப்பட்டிருந்தாலும் உடலியல் பாடப் புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதையும், பல வரைபடங்கள் ஆங்கிலத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் ஆர்வமுள்ள மருத்துவ வல்லுநர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, "தமிழினி" என்ற மன்றத்தை நிறுவினர், இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழ் எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்காக "தமிழினி துணைவன்" குழுவை துவக்க உதவியது" என்றார்.

"தமிழினி துணைவன்" வாட்ஸ்அப் மற்றும் கூகுள் மீட் மூலம் மருத்துவ கற்பித்தல் திட்டத்தை இயக்குகிறது. மேலும், தேசிய மருத்துவ கவுன்சில் (என்எம்சி) வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறது. பல தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 48 மூத்த மருத்துவப் பேராசிரியர்கள் இதற்கு வகுப்புகள் எடுத்து வருகின்றனர். அவர்களில் சில மாநில மருத்துவக் கல்லூரிகளின் துறைத் தலைவர்கள், உயர் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் உள்ளனர். உடற்கூறியல், உடலியல் மற்றும் உயிர்வேதியியல் ஆகிய மூன்று துறைகள், ஓய்வுபெற்ற மூன்று மருத்துவர்களால் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

இந்த முன்முயற்சியின் கீழ் வகுப்புகள் திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெறும். தமிழ் வழிப் பள்ளிகளில் சிறந்த மாணவர்களாக இருந்தாலும், ஆங்கில மருத்துவம் மற்றும் சொற்பொழிவுகளை எதிர்கொள்ளும்போது அவர்கள் அசாதாரண சவாலை எதிர்கொள்கின்றனர்," என்று டாக்டர் காந்தி கூறினார்.

உலகின் மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்றாக விளங்கும் தமிழ், நவீன அறிவியல் இலக்கியங்களோடு செல்ல நிறைய சொற்பொழிவுகளைக் கொண்டுள்ளது. “மருத்துவச் சொற்கள் உள்ளன, பல பாடப் புத்தகங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எங்களிடம் ஐந்து மனநல மருத்துவர்களும் உள்ளனர், இதில் துபாயைச் சேர்ந்த மூத்த நிபுணர் ஒருவர், மனச்சோர்வு மற்றும் கவலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார், ”என்று தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் டாக்டர் காந்தியுடன் படித்த சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஜி தென்றல் கூறினார்.

எம்.பி.பி.எஸ்.,இல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு சுமார் 491 மாணவர்கள் தமிழகத்தில் மருத்துவக் கல்விக்காகச் சேர்ந்துள்ளனர். இந்நிலையில், “தமிழினி துணைவன்” மூத்த பேராசிரியர்கள் 350 மாணவர்களுடன் ஒப்பிடும் போது, ​​அவர்கள் அனைவருக்கும் தங்கள் சேவையை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

“மாணவர்கள் தாய்மொழியில் கருத்துகளைப் புரிந்துகொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் அறிவதால், இந்த கற்பித்தல் திட்டத்தை நாங்கள் தானாக முன்வந்து செய்கிறோம். சர்வதேச நெறிமுறைகளை நாம் கடைபிடிக்கும்போது தகவல்தொடர்பு மற்றும் இடைவெளியைக் குறைக்க ஆங்கிலம் அவசியம். ஆனால் மருத்துவக் கல்வியின் ஆரம்ப கட்டங்களில், மாணவர்களின் தாய்மொழியில் கற்பிக்கும் முறை எப்போதும் பயனுள்ளதாக இருக்கும், ”டாக்டர் தென்றல் மேலும் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment