Advertisment

நாட்டில் காவிகளாக இருக்கலாம்... அது தான் ஆன்மீகம் : தமிழிசை

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
மக்கள் விரோத போக்கை கடைப்பிடித்தால், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது : தமிழிசை

ஸ்டாலினும், ராகுலும் ஒன்றிணைந்து விமர்சனம் செய்தாலும் மத்திய அரசை ஒன்றும் செய்ய முடியாது என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisment

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தமிழிசை பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியும், திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலினும் இணைந்து விமர்சனம் செய்தாலும், மத்திய அரசை ஒன்றும் செய்ய முடியாது.

இந்தி எதிர்ப்பு என்பதைக் காட்டியே ஒரு தலைமுறையை தவறாக வழிநடத்தினர். தவறான கருத்துகளை முன்வைத்து அவர்கள் என்னதான் கூடி குரல் கொடுத்தாலும், மத்திய அரசை அசைக்க முடியாது. கலைஞரின் வைரவிழாவின் போது பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்தது கண்டனத்திற்குரியது.

நாட்டில் பாவிகளாக இருப்பது தான் கூடாதே தவிர காவிகளாக இருக்கலாம். காவிகளாக இருப்பது ஒரு ஆன்மீகம் என்று கூறினார்.

Mk Stalin Rahul Gandhi Tamilisai Soundararajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment