காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை, மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து பேசினார். இதற்காக விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள், கமலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அவருக்கு வீரவாள் மற்றும் ஏர் கலப்பையை பரிசாக அளித்தனர்.
இதன்பின் பேசிய கமல்ஹாசன், "காவிரி விவகாரத்தில் கர்நாடக விவசாயிகள், தமிழக விவசாயிகள் கலந்து பேசினால் அரசியல்வாதிகள் நுழைய முடியாது. என்னை யார் என்று பலர் கேட்கின்றனர்; அவர்களுக்கான பதில் ஏழரை கோடி மக்களில் ஒருவன் நான். கர்நாடகாவில் ரஜினியின் காலா படத்தை காண பல ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்" என்று தெரிவித்தார்.
More Details Awaited...