ஆன்லைன் மூலம் மின்கட்டண உய்ர்வு தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்ற சேவையை அரசு அறிமுகம் செய்துள்ளது.
சமீபத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சாரக் கட்டணங்கள் உயர்வது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் இதற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. புதிய மின்கட்டணம் தொடர்பான புகார்களை ஆன்லைன் மூலம் தெரிவிக்க அரசு வழிவகை செய்துள்ளது. https://www.tangedco.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று புதிதாக இருக்கும் யூஆர்எல் லிங்கை கிளிக் செய்து புகார்களை பதிவு செய்தால், இந்த புகார்கள் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு செல்லும். இந்நிலையில் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் இந்த ஆப்ஷனை பயன்படுத்தலாம்.
தங்களது புகார் அல்லது ஆலோசனையை தெரிவிக்க வேண்டும் என்று பொது மக்கள் தெரிவித்தால், அவர்கள் தங்களது கைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து அவர்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். மேலும் அவர்களது இ-மெயில் ஐடியை பதிவு செய்ய வேண்டும். இந்த இ-மெயில் முகவரிக்கு தகவல்கள் அனுப்பிவைக்கப்படும்.
இது தொடர்பாக முக்கிய அதிகாரி பேசியபோது, ஆன்லைன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், நேடியாக மக்களை சந்தித்து குறைகளை கேட்டறியும் முறை நிறுத்தப்படும் என்று அர்த்தமல்ல. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மக்களை நேரில் சந்திக்கும் நிகழ்வுகளை நடத்தும் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.