Advertisment

வீரமலையில் புதன் கிழமை துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்கள் நடமாட தடை

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமத்தில் உள்ள வீரமலையில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவதால் ஜூலை 20 ஆம் தேதி புதன்கிழமை அப்பகுதியில் பொதுமக்கள், கால்நடைகள் யாரும் நடமாடக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
trichy district, manapparai, aniyappur, veeramalai, gun firing practice, firing practice, வீரமலையில் துப்பாக்கிச்சூடு பயிற்சி, பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம்,

க.சண்முகவடிவேல், திருச்சி

Advertisment

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமத்தில் உள்ள வீரமலையில் துப்பாக்கி சுடும் இடத்தில் 20-07-2022-ம் தேதி‌ புதன்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5.30 வரை‌ CTC-||, CPRF, CBE Unit பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற இருப்பதால் அச்சமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது. மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக் கூடாது எனவும் மாவட்ட ஆட்சி தலைவர் தலைவர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் புதுக்கோட்டை நார்த்தாமலைப் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி பயிற்சி மேற்கொண்டபோது துப்பாக்கியிலிருந்து வெளியான தோட்டா தவறுதலாக குடியிருப்பு பகுதிக்கு சென்றதில் புகழேந்தி என்ற 11 வயது சிறுவன் மீது தோட்டா பாய்ந்து பலியானது குறிப்பிடத்தக்கது.

எனவே, ஜூலை 20 ஆம் தேதி புதன் கிழமை அணியாப்பூர் கிராம மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது சாலச்சிறந்தது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tiruchi District
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment