சந்தையில் வாங்கிய சமைக்காத இறைச்சி மற்றும் கடல் உணவுகளை மெட்ரோ ரயிலில் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பயணிகள் சமைக்காத இறைச்சி மற்றும் கடல் உணவுகளை மெட்ரோ ரயில்களில் கொண்டுச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என்றும் இதுபோன்ற பொருட்களை எடுத்து செல்வோரை மெட்ரோ ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தப்படுவர் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2014,ன் மெட்ரோ ரயில்வே விதிகளின்படி சமைக்காத இறைச்சி மற்றும் கடல் உணவுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உணவுகளால் ரயிலில் துர்நாற்றம் வீசக்கூடும் என்றும் இது சக பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுபோல் சமைத்த உணவுகளை எடுத்து செல்லலாம், ஆனால் அதை ரயில் நிலையத்தில் மற்றும் ரயிலில் உட்கொள்ள கூடாது என்று கூறப்பட்டுள்ளது.