Advertisment

செங்கல்பட்டு முதல் திருநெல்வேலி வரை... மாவட்டம் வாரியாக மழை வெள்ள எச்சரிக்கை அறிவிப்பு

இடைவிடாத மழையால், அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
செங்கல்பட்டு முதல் திருநெல்வேலி வரை... மாவட்டம் வாரியாக மழை வெள்ள எச்சரிக்கை அறிவிப்பு

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழை நீர் தேங்கியிருப்பதால், மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடர் மழையால், ஏரிகள், அணைகள் நிரம்பி வருவதால், பல்வேறு இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

கரையோர மக்கள் பாதுகாப்பு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடைவிடாத மழையால், அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எட்டு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

செங்கல்பட்டு

சராசரி அளவைவிட செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்தாண்டு 95 முதல் 100 விழுக்காட்டிற்கு மழை பெய்துள்ளது. பெரும்பாலான நீர்நிலைகள் 50 விழுக்காடு நிறைந்துள்ளது. மழை நீரால் பாதிக்கப்படவுள்ள பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை

சராசரி அளவைவிட மயிலாடுதுறையில் மாவட்டத்தில் இந்தாண்டு 95 முதல் 100 விழுக்காடிற்கு மழை பெய்துள்ளது.பெரும்பாலான நீர்நிலைகள் 50 முதல் 100 விழுக்காடு வரை நிறைந்துள்ளது. மழை நீரால் பாதிக்கப்படவுள்ள பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

திருவாரூர்

சராசரி அளவைவிட திருவாரூர் மாவட்டத்தில் இந்தாண்டு 95 முதல் 100 விழுக்காடிற்கு மழை பெய்துள்ளது.பெரும்பாலான நீர்நிலைகள் 60 முதல் 70 விழுக்காடு வரை நிறைந்துள்ளது. மழை நீரால் பாதிக்கப்படவுள்ள பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கடலூர்

சராசரி அளவைவிட கடலூர் மாவட்டத்தில் இந்தாண்டு 95 முதல் 100 விழுக்காடிற்கு மழை பெய்துள்ளது.பெரும்பாலான நீர்நிலைகள் 60 முதல் 70 விழுக்காடு வரை நிறைந்துள்ளது. மழை நீரால் பாதிக்கப்படவுள்ள பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் சராசரி மழை அளவை விட இந்தாண்டு அதிகளவில் 95 முதல் 100 விழுக்காடிற்கு மழை பெய்துள்ளது. பெரும்பாலான நீர்நிலைகள் 70 முதல் 80 விழுக்காடு வரை நிறைந்துள்ளது. மழை நீரால் பாதிக்கப்படவுள்ள பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி

நாகப்பட்டினத்தில் சராசரி மழை அளவை விட இந்தாண்டு அதிகளவில் 95 முதல் 100 விழுக்காடிற்கு மழை பெய்துள்ளது. பெரும்பாலான நீர்நிலைகள் 50 முதல் 60 விழுக்காடு வரை நிறைந்துள்ளது. மழை நீரால் பாதிக்கப்படவுள்ள பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் சராசரி மழை அளவை விட இந்தாண்டு அதிகளவில் 95 முதல் 100 விழுக்காடிற்கு மழை பெய்துள்ளது. பெரும்பாலான நீர்நிலைகள் 50 முதல் 60 விழுக்காடு வரை நிறைந்துள்ளது.

விழுப்புரம்

விழுப்புரத்தில் சராசரி மழை அளவை விட இந்தாண்டு அதிகளவில் 95 முதல் 100 விழுக்காடிற்கு மழை பெய்துள்ளது. பெரும்பாலான நீர்நிலைகள் 50 முதல் 60 விழுக்காடு வரை நிறைந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Weather Weather Forecast Report Rain In Tamilnadu Chennai Rains
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment