கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை காவலர் திருமாவளவன், கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார்.
இது குறித்து அவர், “சிறு வயதில் இருந்தே எனக்கு அரசியலில் ஆர்வம் உண்டு. பிரதமர் நரேந்திர மோடி, மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரின் செயல்பாடுகள் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு பாரதிய ஜனதா கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்” என்றார்.
மேலும், “தனக்கு சிறு வயதில் இருந்தே அரசியல் ஆர்வம் உண்டு” எனத் தெரிவித்தார். தொடர்ந்து, “அரசியலில் ஈடுபட்டு மக்கள் பணி செய்யப் போவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, 'நம் கொள்கை லட்சியத்தை அடைய தடைகளை தாண்டிதான் வர வேண்டும்' என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“