சென்னை:
செஞ்சிலுவை சங்கத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய அதிகாரிகள் மீது சென்னை மத்திய புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில், ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆளுநர் ஆளுநரின் துணைச் செயலாளரும், ஆளுநர் அலுவலகத்தில் கன்ரோலருமான டி.செங்கொட்டையன் அளித்த புகாரில், 2011 முதல் 2020 வரை இந்திய செஞ்சிலுவை இழப்பை ஏற்படுத்தியது, சதி, நம்பிக்கை மீறுதல் மற்றும் சங்க நிதியை தவறாக பயன்படுத்தயது, உட்பட பல கிரிமினல் குற்றங்களை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார்.
இதில், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் டாக்டர் ஹரிஷ் எல் மேத்தா, தமிழக கிளை, எம்.எஸ்.எம். நஸ்ருதீன், அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் சி இந்தர்நாத், அமைப்பின் பொருளாளர் செந்தில்நாதன், அமைப்பின் முன்னாள் பொருளாளர் மணீஷ் புதுடில்லியில் உள்ள அதன் தேசிய தலைமையகத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் துணை / இணைச் செயலாளர் சவுத்ரி மற்றும் டி.என் கிளையின் முன்னாள் தலைவர் டாக்டர் வி வதிவேல் முகுந்தன் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு பிரிவில், சங்க நிதியில் இருந்து 30 சதவீதம் மட்டுமே சமூக பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக, எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சிபிஐ எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றம் உத்தரவின்படி தமிழக கிளையின் கவுரவ துணைத் தலைவராக இருந்த சங்கர் நாகநாதன், அமைப்பின் சில உறுப்பினர்கள் மீது நிதி மோசடி குற்றச்சாட்டுகளாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"