Advertisment

விரைவில் இலவச செட்டாப் பாக்ஸ்: அமைச்சர் அறிவிப்பு

அரசு கேபிள் சார்பில் அனைவருக்கும் விரைவில் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
DTH customers FTA channels connections details

DTH customers FTA channels connections details

அரசு கேபிள் சார்பில் அனைவருக்கும் விரைவில் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் அறிவித்துள்ளார்.

Advertisment

அரசு கேபிள் டிவி நிறுவனம் கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. குறைந்த கட்டணத்தில் நிறைவான கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதே இதன் நோக்கம் ஆகும். பல்வேறு காரணங்களால் செயலிழந்து கிடந்த அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு புத்துயிரூட்டப்பட்டு, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் என கடந்த 2011-ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இச் சேவை சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் அதே ஆண்டும், சென்னை மாநகர ஒளிபரப்பு சேவையை கடந்த 2012-ஆம் ஆண்டும் தொடங்கப்பட்டது.

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் தற்பொழுது குறைந்த கட்டணத்தில் 90 - 100 சேனல்களை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. இந் நிறுவனத்துக்கு தற்போதைய நிலவரப்படி, சுமார் 70 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிறுவன சேவை அனலாக் முறையில் மேற்கொள்ளப்பட்டதால், தனியாருக்கு இணையாக துல்லியமான காட்சிகளை வழங்க முடியவில்லை. எனவே, அரசு கேபிள் டிவி நிறுவனம், டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அனுமதி கோரி மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத் திடம் விண்ணப்பித்திருந்தது. பல ஆண்டுகள் நிலுவைக்கு பின்னர், கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்று இதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் ஏற்கெனவே பதிவு செய்துள்ள உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள், இந்நிறுவனத்தின் டிஜிட்டல் கேபிள் டிவி சிக்னலைப் பெற்று தொடர்ந்து தொழில் செய்வதற்கு பதிவு செய்து வருகின்றனர். இதனிடையே, டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையை பெற செட்டாப் பாக்ஸ் அவசியம் என்பதால், அதனை பெறுவதற்கான ஒப்பந்தப் புள்ளியை அரசு கேபிள் டிவி நிறுவனம் அண்மையில் கோரியது.

இந்நிலையில், அரசு கேபிள் சார்பில் அனைவருக்கும் விரைவில் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மேலும், ரூ.80 கோடியில் 26.79 லட்சம் கிராமப்புற மக்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்படும் எனவும், அரசை எளிதில் தொடர்புகொண்டு மக்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள "நமது அரசு" என்ற வலைதளம் உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment