Advertisment

சென்னையில் காந்தி சிலைக்கு ஆர்.என் ரவி- ஸ்டாலின் இணைந்து மரியாதை

சென்னை எழும்பூர் அரசு அருகாட்சியகம் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் காந்தியடிகளின் திருவுருவ சிலக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு தமிழக அரசு சார்பில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

author-image
WebDesk
New Update
சென்னையில் காந்தி சிலைக்கு ஆர்.என் ரவி- ஸ்டாலின் இணைந்து மரியாதை

காந்தியின் 154வது இன்று நாடு முழுவதும் கொண்டாப்பட்டு வருகிறது.  சென்னை எழும்பூர் அரசு அருகாட்சியகம் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் காந்தியடிகளின் திருவுருவ சிலக்கு கீழே  வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு தமிழக அரசு சார்பில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை  செலுத்தினார்கள்.

இந்நிகழ்வில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், எம்.ஆர்.காந்தி, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், பரந்தாமன் எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், சர்வோதய சங்கம் சார்பில் நூற்பு வேள்வி மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் , அமைச்சர்கள் ஆகியோர் கண்டுகளித்தனர். தேசத்தந்தை காந்தியடிகளின் காந்திய பாடல்கள், கதர் நூலாடை பின்னுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment