Advertisment

கத்தி முனையில் பாலியல் பலாத்காரம்... கத்தியை பிடுங்கி இளைஞரை குத்தி கிழித்த பெண்!

ஆத்திரமடைந்த அந்த பெண் வாலிபரின் கையில் இருந்த கத்தியை பிடுங்கி அவரை சரமாரியாக குத்தியுள்ளார்

author-image
WebDesk
New Update
girl kills man who tried to rape her

girl kills man who tried to rape her

girl kills man who tried to rape her : திருவள்ளூர் அருகே இயற்கை உபாதையை கழிக்க சென்ற இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்.இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருவள்ளூர் அருகே, அந்த 19 வயது பெண், வார விடுமுறைக்காக தனது அத்தை வீட்டிற்கு வருகை தந்தார். இரவு, நேரத்தில் இயற்கை உபாதைக்காக காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து அஜித்குமார் (25) என்ற இளைஞர் பின்னாடியே சென்றுள்ளார்.

கையில் கத்தியுடன் சடாரென வந்த வாலிபரை பார்த்து இளம்பெண் பதறியுள்ளார். தொடர்ந்து, சத்தம் போடாதே என்று மிரட்டிய அஜித்குமார், கத்தி முனையில் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் வாலிபரின் கையில் இருந்த கத்தியை பிடுங்கி அவரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் கழுத்து, முகம், கை என பல இடங்களில் குத்து வாங்கிய அஜித்குமார் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்து புறப்பட்ட அவர், சோழவரம் காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறி சரணடைந்தார்.

தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் அஜித்குமார் இறந்து கிடந்ததை உறுதி செய்தனர். இந்நிலையில், அஜித்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சம்பவம் தொடர்பாக கவுதமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment