ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "துணைவேந்தர் நியமனத்தில் தலையீடு ஏதும் இல்லை. அண்ணா பல்கலை. துணைவேந்தர் நியமனம் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற்றது" என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் நலன் கருதியே துணை வேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணைவேந்தர் நியமனம், விதிகளின்படியே நடைபெற்றுள்ளதால், அதனை அரசியலாக்க வேண்டாம். தேடல் குழு பரிந்துரைத்த 3 பேரில் ஒருவர் தான் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More Details Awaited...