Advertisment

பா.ஜ.க தலைமையை மகிழ்ச்சிப்படுத்த விரும்பினால் ஆர்.என். ரவி ராஜினாமா செய்ய வேண்டும் - தி.மு.க கூட்டணி தலைவர்கள்

ஆளுநர் ஆர்.என். ரவி, பா.ஜ.க தலைமையை மகிழ்விப்பதற்காக இதுபோன்ற கருத்துக்களை வெளிப்படுத்த விரும்பினால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தினர்.

author-image
WebDesk
New Update
Governor RN Ravi should resign, DMK led alliance leaders, TR Baalu Vaiko Thirumavalavan joint statement, பா.ஜ.க, ஆர்.என். ரவி ராஜினாமா செய்ய வேண்டும், தி.மு.க கூட்டணி தலைவர்கள், DMK, Tamilnadu news, RN Ravi

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளிப்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டிய ஆளும் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள், ஆர்.என். ரவி, பா.ஜ.க தலைமையை மகிழ்விப்பதற்காக இதுபோன்ற கருத்துக்களை வெளிப்படுத்த விரும்பினால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 30) வலியுறுத்தினர்.

Advertisment

“ஆர்.என். ரவி தமிழ்நாடு ஆளுநராக இருப்பதால் அவரது பேச்சுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தனக்கு உயர் பதவி கிடைக்க வேண்டும் என்று பா.ஜ.க தலைமையை மகிழ்விப்பதற்காக அவர் கருத்து தெரிவித்தால், அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் மாநில ஆளுநராக இருக்கும் வரை இதுபோன்ற கருத்துகளை தெரிவிக்கக் கூடாது” என தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், த.மு.மு.க தலைவர் காதர் மொஹிதீன், வி.சி.கே தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, கொங்கு நாடு தேசிய கட்சி பொதுச் செயலாளர் இ.ஆர். ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் டி.வேல்முருகன் ஆகியோர் இந்த கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

தமிழ்நாடு ஆளுநர் இந்துத்துவாவை ஊக்குவிக்கிறார் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

“மாநில ஆளுநராக பதவியேற்றதில் இருந்து ஆர்.என். ரவி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். தேவையற்ற சர்ச்சையையும் குழப்பத்தையும் ஏற்படுத்த அவர் இதைச் செய்கிறாரா அல்லது அவரை நோக்கி கவனத்தை ஈர்க்கும் ஆசையால் உந்தப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை” என்று அறிக்கையில் கூறியுள்ளனர்.

சனாதன தர்மம், ஆரியம், திராவிடம், பட்டியல் சாதிகள் மற்றும் திருக்குறள் பற்றிய அவரது கருத்துக்கள் ஆபத்தானது மற்றும் அபத்தமானது என்று இந்த தலைவர்கள் தெரிவித்தனர். “அவரது தனிப்பட்ட ஆன்மீக நம்பிக்கைகளைப் பற்றி பேசினால் அவருடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அரசியலமைப்பு பதவியை வகித்துக்கொண்டு பழமைவாத மற்றும் விஷமத்தனமான கருத்துக்களை அவர் வெளிப்படுத்துவது நியாயமற்றது” என்று அவர்கள் தெரிவித்தனர்.

கவர்னர் மாறவில்லை என்றால் அவரது வாதங்களுக்கு எதிர் எதிர் கருத்துக்களை கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். “ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகப் பேசுகிறார். அவர் மாநில ஆளுநராகப் பதவியேற்றதற்கு எதிராகச் செயல்படுகிறார் என்பது அவருக்குத் தெரியுமா” என்று தலைவர்கள் தெரிந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாடு ஒரு மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆளுநரின் வாதத்திற்கு விதிவிலக்கு அளித்து, இந்து நாடு என்று கூறிக்கொள்ளும் நேபாளம் கூட உண்மையில் ஒரு கூட்டாட்சி நாடாளுமன்றக் குடியரசு என்று அறிக்கையில் கூறியுள்ளனர்.

“அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரைக்கு எதிராகப் பேசுவதை ஆளுநர் நிறுத்த வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடு மதச்சார்பற்றது. ஆனால், கவர்னர் ஒரு மதத்திற்கு ஆதரவாக வாதிடுகிறார். இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது” என்று கூட்டறிக்கையில் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Thirumavalavan Governor Rn Ravi Vaiko Tr Baalu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment