சென்னையை விரிவாக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இந்த முடிவு சென்னை மண்டலத்தின் நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை பகுதிகளில் இருந்து 1,225 புதிய கிராமங்களை சென்னை நகராட்சியுடன் இணைக்கவுள்ளனர்.
இவ்வாறு உள்ளடக்கிய பின்பு சென்னை நகரம் 1,189 சதுர கிலோ மீட்டரிலிருந்து 5,904 சதுர கிலோ மீட்டராக விரிவுபடுத்தப்படும் என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெருநகரப் பகுதியில் சீரான நகர்ப்புற வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ஏராளமான நீர்நிலைகள் மற்றும் பசுமைப் பகுதிகளைப் பாதுகாக்கவும் மற்றும் நிர்வகிக்கவும், சென்னை பிராந்தியத்தில் நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யவும், அரசாங்கம் இந்த விரிவாக்க உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை தமிழக சட்டப் பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி வெளியிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil