தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளின் படி பிரிக்கப்பட்டுள்ள வார்டுகளுக்கு தேவையான திட்டங்களை பரிந்துரைப்பது, மேலும் மக்களுக்கு இருக்கும் குறைகளுக்கு தீர்வு காண்பது போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபைகளை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டம் அமைக்கப்பட்ட பின்பு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து வார்டுக்கும் வார்டு கமிட்டிகள் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதற்கு தலைவராக அந்தந்த வார்டு கவுன்சிலர் இருப்பார். இந்த கட்டமைப்பில் வார்டு கமிட்டியின் கூட்டம் நடைபெற வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் அறிவுறுத்தல் படி, சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் தலா 10 ஏரியா சபைகள்அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணை மற்றும் வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள ஏரியா சபைகள் அடங்கிய வரைபடம் ஆகியவை பொதுமக்களின் தகவலுக்காக, சென்னை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/area_sabha/ என்ற இணையதள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil