வீட்டில் சுகப்பிரசவம் பார்க்க பயிற்சி அளிக்கப்படும் என அறிவித்த ஹீலர் பாஸ்கர் கோவையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை நிஷ்டை மையத்தின் உரிமையாளராக இருப்பவர் ஹீலர் பாஸ்கர். இவர், வீட்டில் சுகப்பிரசவம் பார்க்க பயிற்சி அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், மோசடி புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் இவரை இன்று கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, "வீட்டில் பிரசவம் பார்க்கலாம், தடுப்பூசி வேண்டாம் என பொய் பிரச்சாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அறிவியலுக்கு புரம்பாக செயல்படுவது, வதந்தியை பரப்புவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்படும்" என சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.