தமிழகத்தில் இன்று (அக்.30) முதல் நவம்பர் 2 வரை பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. சென்னை முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது. மாநிலம் முழுவதும் குறிப்பிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறதுய். இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் மழை தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கை
அதில், அக்டோபர் 30 முதல் நவம்பர் 2 வரையிலான 4 நாட்களுக்கான வானிலை முன்அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. அக்.30- ல் தமிழகம் மற்றம் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அனேக இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
அக்.31-ல் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதிகள், ராயலசீமா ஆகியவற்றில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 1- ல் ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதி, தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகியவற்றில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ.2-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் காலை முதலே பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் சேப்பாக்கம், அடையாறு, கிண்டி, கோடம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர் துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்.