சென்னையில் இன்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் நாளையும் மழை தொடரும் என்பதால், சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை ஆரம்பமாகிவிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இலங்கைக்கு அருகே ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது.
இன்று காலை முதலே சென்னை முழுவதும் மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதையடுத்து வாகனப்போகுவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து நந்தனம் வர மூன்று மணி நேரத்துக்கு மேலானது. காலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் மாலை ஆறு மணி வரையில் சரி செய்யப்படவில்லை.
தொடர்ந்து மழை பெய்து வந்ததால், சென்னையில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக பள்ளிகள் விடப்பட்டன. இந்நிலையில் நாளை முதல் 2ம் தேதி வரையில் கன மழையோ அல்லது மிக கனமழையோ பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, சென்னையில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட செயலாளர் அன்புசெழியன் வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். இதேப்போல திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.