தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு... மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamilnadu weather report, வானிலை

tamilnadu weather report, வானிலை

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

தமிழகத்தின் கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இயக்குநர் அளித்த பேட்டியில், மத்திய மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திரா கடல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறினார். இதனால், தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் கன்னியாகுமரி மற்றும் அதனையொட்டி உள்ள பகுதியில் கடல் காற்று மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகம் வரை வீசும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: