Advertisment

மீண்டும் தொடங்கியது கனமழை: 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மீண்டும் தொடங்கியது கனமழை: 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் என பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்தது. சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்த தொடர் மழையால் வழக்கத்தைவிட அதிகளவில், அதாவது 68 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

Advertisment

ஆனால், தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால் இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று காலை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் தெரியாத அளவிற்கு குளிர்ச்சியான சூழ்நிலை காணப்பட்டது. சில இடங்களில் சாரல் மழை பெய்தது. நேற்று மாலை 5 மணிக்கெல்லாம் சென்னையை இருள் சூழத் தொடங்கியது. வாகனங்கள் ஹெட்லைட்டை ஒளிரவிட்டுக் கொண்டு தான் சென்றன.

இதைத் தொடர்ந்து, சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய தொடங்கியது. எழும்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, கொளத்தூர், அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, தரமணி, பெருங்குடி, தி.நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இரவு முழுவதும் கனமழை பெய்தது.

இதேபோல் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் சில பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், "தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே உருவான குறைந்தழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அப்படியே உள்ளது. அது 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பரவி இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த மழை நிலப்பகுதியில் பெய்யாமல் கடலில் பெய்துவிட்டது.

திங்கட்கிழமை (இன்று) பகல் 12 மணிவரை வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். பகல் 12 மணிக்கு மேல் வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில சமயங்களில் லேசான மழை பெய்யும்.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் இதுவரை பெய்ய வேண்டிய மழை அளவு 268 மி.மீ. ஆனால் 245 மி.மீ. மழை பெய்து இருக்கிறது. இது 9 சதவீதம் குறைவு ஆகும். ஆனால் சென்னை மாவட்டத்தில் மழை 55 சதவீதம் கூடுதலாக பெய்து இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக 78 சதவீதம் கூடுதலாக மழை பெய்து உள்ளது" என்றார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment