Advertisment

கோவை மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை

கோவை உக்கடம், டவுன் ஹால், ரயில் நிலையம், பிரபல கோவில்கள் முன்பு என மாநகர பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Coimbatore

Heavy security in Coimbatore city

கோவையில் 19 இஸ்லாமியர்கள் இறந்த தினம் மற்றும்  டிசம்பர் 6 போன்ற நிகழ்வுகளை முன்னிட்டு  மாநகரத்தின் முக்கிய இடங்களில்  போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

கோவையில் கடந்த 1997 ஆம் ஆண்டு, உக்கடம் பகுதியில் பணியில் இருந்த காவலர் செல்வராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கோவையில் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது. கலவரத்தில் 19 இஸ்லாமியர்கள் உயிரிழந்தனர்.

publive-image
publive-image
publive-image
publive-image

காவலர் செல்வராஜ் இஸ்லாமியர்கள் இறந்த  சம்பவங்கள் நடந்த இந்த நாளில் கோவை உக்கடம், டவுன் ஹால், ரயில் நிலையம், பிரபல கோவில்கள் முன்பு என மாநகர பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே போல பாபர் மசூதி இடிப்பு 13வது நினைவு தினமான டிசம்பர் 6ம் தேதியை முன்னிட்டும்  கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment