Advertisment

மழை தொடர்பான புகார்கள்: உங்கள் ஏரியாவுக்கான அதிகாரிகளை தொடர்புகொண்டு தெரிவியுங்கள்

கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 மணிநேர கட்டுப்பாட்டு அறைகளின் தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai rains, rain issues, chennai floods,tamilnadu government

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 மணிநேர கட்டுப்பாட்டு அறைகளின் தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisment

பொதுமக்கள் மழையால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து புகார்களை தெரிவிக்க, தங்கள் பகுதிக்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரியின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் கண்காணிப்பு மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள தொழில்துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1. திருவொற்றியூர் மண்டலம்: கே.நந்தகுமார் (7550225801)

2. மணலி மண்டலம்: மரியம் பல்லவி பல்தேவ் (7550225802)

3. மாதவரம் மண்டலம்: சந்தோஷ் பாபு (7550225803)

4. தண்டையார்பேட்டை மண்டலம்: டி.என்.வெங்கடேஷ் (7550225804 )

5. ராயபுரம் மண்டலம்: பி.உமா நாத் (7550225805)

6. திரு.வி.க. நகர் மண்டலம்:சி.காமராஜ் (7550225806)

7. அம்பத்தூர் மண்டலம்:எம்.பாலாஜி (7550225807)

8. அண்ணாநகர் மண்டலம்:ஆர்.நந்தகுமார் (7550225808)

9. தேனாம்பேட்டை மண்டலம்: ஆர்.செல்வராஜ் (7550225809)

10. கோடம்பாக்கம் மண்டலம்:சி.விஜயராஜ்குமார் (7550225810)

11. வளசரவாக்கம் மண்டலம்: ஆர் கிர்லோஷ் குமார் (7550225811)

12. ஆலந்தூர் மண்டலம்: கிரண் குர்ராலா (7550225812)

13. அடையாறு மண்டலம்: மைதிலி கே.ராஜேந்திரன் (7550225813)

14. பெருங்குடி மண்டலம்: ஆர்.பழனிச்சாமி (7550225814)

15. சோழிங்கநல்லூர் மண்டலம்: தாரேஸ் அகமது (7550225815)

மாநகராட்சி தலைமை இடம்: அனு ஜார்ஜ் (7598960125)

பொதுமக்கள் மேற்கண்ட அதிகாரிகளின் எண்களுக்கு தொடர்புகொண்டு, மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment