Advertisment

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு

இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

author-image
WebDesk
New Update
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு

மருத்துவ படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முந்தைய அதிமுக அரசு முடிவு செய்தது.

Advertisment

அதன்படி, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின்பேரில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்தது.

இந்த சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதேபோன்று அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களும், இதே 7.5 சதவீத இடஒதுக்கீட்டை தங்களுக்கும் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு, இன்று தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதிகள் கூறியதாவது, " மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செல்லும். 5 ஆண்டுகளுக்கு பிறகு இடஒதுக்கீடு குறித்து மறுஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும், இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Medical Admission Medical College Reservation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment