Advertisment

மணல் கொள்ளை செய்பவர்களுக்கு உதவும் அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அரசாணை?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
புதுவை துணைநிலை

புதுவை துணைநிலை

மணல் கொள்ளை உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அரசாணை பிறப்பிக்கபட்டுள்ளதாகவும் இதனை மாவட்ட எஸ்.பி.களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisment

மணல் கடத்தல் வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பாபு என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி வேடியம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எஸ். ராமதிலகம் அமர்வில் நிலுவையில் உள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மணல் கடத்தல் விவகாரத்தில் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள்

சட்டத்தை மீறாமலும் பொதுமக்களுக்கு எந்த சந்தேகமும் இல்லாத வகையில் இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

மேலும் மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு ஊழியர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும் ஒருவர் மீது கூட குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினர். பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள் மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணல் கொள்ளை வழக்கு :

அரசு அதிகாரிகள் மணல் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் மீது 4 வாரத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உள்துறை செயலாளர், மற்றும் டி.ஜி.பி ஆகியோர் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும், விசாரணை ஆணையத்திற்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய அரசானை பிறபிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அரசானையை பின்பற்ற அனைத்து மாவட்ட எஸ் பி களுக்க்கும் சுற்றிறிக்கை அனுப்பபட்டிருப்பதாக்வும் தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த அரசாணையை தமிழக அரசு உறுதியுடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment