Advertisment

டிடிவி தினகரன் மேலூர் பொதுக் கூட்டத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

டிடிவி தினகரனின் மதுரை மாவட்டம் மேலூர் கூட்டத்துக்கு அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
AIADMK, It Raid in Chennai, Jaya TV Office, IT Raid in Kodanadu Estate, Thanjavur, Viduthalai Chiruthaigal Katchi, BJP,Pooja

டிடிவி தினகரனின் மதுரை மாவட்டம் மேலூர் கூட்டத்துக்கு அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக-வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சசிகலாவால், அதிமுக (அம்மா அணி) துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட தினகரன், கடந்த வாரம் தன்னிச்சையாக புதிய நிர்வாகிகளை நியமித்து உத்தரவிட்டார். மேலும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, வருகிற 14-ம் தேதி முதல் மாவட்ட வரியாக சுற்றுப்பயணம் மற்றும் பொதுக் கூட்டத்தையும் டிடிவி தினகரன் அறிவித்தார். அதன்படி, ஆகஸ்ட் 14-ம் தேதி மதுரை மாவட்டம் மேலுாரில் தனது சுற்றுப் பயணத்தை தினகரன் தொடங்குகிறார்.

இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அம்மா அணியின் ஆலோசனைக் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில், தினகரனின் நியமனம் அதிமுக சட்டவிதிகளுக்கு விரோதமானது. தினகரன் அதிமுக பொறுப்பாளர்களை தன்னிச்சையாக நியமித்துள்ளார். கட்சி தொடர்பாக முடிவுகள் எடுக்க தினகரனுக்கு உரிமை இல்லை. இதுவரை கட்சியில் அவர் எடுத்த முடிவுகள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்டவைகள் செல்லாத ஒன்று. தினகரன் அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது. தினகரனால் தரப்பட்ட பதவிகளை அதிமுக-வினர் நிராகரிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனால், டிடிவி தினகரன் அணி மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகளுக்கு இடையேயான மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இரு தரப்பினரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். எனவே, தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் தினகரன் பங்கேற்கும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பொதுக் கூட்டம் கேள்விக்குறியானது.

முதல்வராக பழனிசாமி உள்ளதால் டிடிவி தினகரனின் மேலூர் பொதுக் கூட்டம் திட்டமிட்டபடி நடக்குமா? அதற்கு அனுமதி வழங்கப்படுமா? என்ற சந்தேகம் நிலவியது. அதற்கு ஏற்றாற்போல், பொதுக் கூட்டத்துக்கு போலீசார் இதுவரை அனுமதி வழங்காமல் இருந்தனர்.

இதையடுத்து, மேலூர் அதிமுக நகரச் செயலாளர் சரவணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், டிடிவி தினகரன் தலைமையில் நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு மீதான விசாரணை நடத்திய நீதிபதி சுந்தர், மதுரை மேலூரில் வரும் 14-ம் தேதி டிடிவி தினகரன் பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

Mgr Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment