Advertisment

சிஏஏ மூலம் இலங்கை தமிழர்கள் இந்திய குடியுரிமை பெறலாம்: மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து

சிஏஏ சட்டத்தின் கீழ் இலங்கை இல்லை என்றாலும், இலங்கையில் நடைபெற்ற போரில் இலங்கை தமிழர்கள் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்களும் சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற முடியும் என்று கூறினார்.

author-image
WebDesk
New Update
உலகத் தமிழ் சங்கத்தின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? தமிழக அரசு அறிக்கை தர மதுரைக் கிளை உத்தரவு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள  இந்திய குடியுரிமைசட்டம் படி, இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினர் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஆகிய நாடுகளில் இருந்து டிசம்பர் 2014-க்கு இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை அளிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.

அந்த சட்டத்தின் கீழ் இலங்கை குறிப்பிடப்படவில்லை.இது  குறித்து சென்னை  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. தமிழகத்தின் திருச்சியை சேர்ந்தவர் அபிராமி. இவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது பேசிய நீதிபதி, சிஏஏ சட்டத்தின் கீழ் இலங்கை இல்லை என்றாலும், இலங்கையில் நடைபெற்ற போரில் இலங்கை தமிழர்கள் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்களும் சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற முடியும்  என்று கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக 16 வாரங்களுக்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என கூறிய  வழக்கை தள்ளிவைத்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment