தேர்தலில் இனி போட்டியிட மாட்டேன் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார், “ஈடோடு மற்றும் தேனியில் இருந்து பொதுத்தேர்தலில் 5 முறை போட்டியிட்டிருக்கிறேன். இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறேன். 3 முறை தோல்வியடைந்திருக்கிறேன். இனி நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.
இவர் மிக பிரபலமான அரசியல் தலைவரன ஈ. வெ. கி. சம்பத் என்பவரின் மகனும், பெரியாரின் சகோதரர் கிருஷ்ணசாமியின் பேரனுமாவார். மேலும் இவரது மகன்தான் இந்த விழாவை தலைமையேற்று நடத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil