'கேட்டது ஜஸ் கிரீம்.. வந்தது ஆணுறை': வாடிக்கையாளருக்கு ஷாக் கொடுத்த ஸ்விக்கி
குழந்தைகளுக்கு ஐஸ் கிரீம் ஆர்டர் செய்தவருக்கு, பார்சலில் ஆணுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆணுறைகள் எப்படி வந்தன என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
கோவை மாவட்டத்தில் தனியார் ஆங்கில செய்தி நாளிதழில் புகைப்பட கலைஞராக பணியாற்றும் நபர் ஒருவர், நேற்றிரவு (ஆகஸ்ட் 27) உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கியில் தனது குழந்தைகளுக்காக ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸை ஆர்டர் செய்துள்ளார்.
Advertisment
ஆனால் இவருக்கு வந்த பார்சலில் ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸுக்கு பதிலாக ஆணுறை இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அதனை புகைப்படம் எடுத்து அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு ஸ்விக்கியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அந்நிறுவனம் மன்னிப்பு கோரி பணத்தை திருப்பி அளிப்பதாக தகவல் கூறியுள்ளது. உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் இது போன்று பொருள்கள் டெலிவரி செய்யப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
ஸ்விக்கி நிறுவனம் மீதான புகாரும், ஸ்விக்கி விளக்கமும்!
மேலும் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் இருந்து ஆணுறை எவ்வாறு வந்தது எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தப் புகார் தொடர்பாக ஸ்விக்கி ட்விட்டரில், சம்பந்தப்பட்ட நபருக்கு அளித்த பதிலில், “உங்களுக்கு தவறான பொருள்கள் விநியோகிக்கப்பட்டதற்கு மன்னிக்கவும். உதவிகளுக்கு உங்கள் ஆர்டர் எண்ணை பதிவிடவும் எனத் தெரிவித்திருந்தது.
செய்தியாளர் பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“