Indigo Airlines: இண்டிகோ விமானம் பெங்களூருவுக்கும் திருச்சிக்குமான விமான போக்குவரத்தை நவம்பர் 16-ம் தேதி மீண்டும் தொடங்குகிறது.
இண்டிகோ விமானம் சமீபத்தில் திருச்சி-பெங்களூருவுக்கு இடையேயிருந்த காலை விமான சேவையை மாலையில் மாற்றியது. ஆகையால் நவம்பரில் அறிமுகப்படுத்தவிருக்கும் இந்த புதிய சேவை காலை நேரத்தில் அமல்படுத்தப்படுகிறது. அதோடு இண்டிகோ நிறுவனம், சிங்கப்பூர் விமானங்களை நிறுத்தி வைத்ததும், பயணிகளுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. இந்நிலையில், பெங்களூருக்கான காலை விமானமும், சிங்கப்பூர் சேவையும், பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த புதிய விமானம் பெங்களூருவில் (எண் 6 இ 7236) இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு காலை 8.15 மணிக்கு திருச்சியை எட்டும். பின்னர் (விமானம் 6 இ 7237) திருச்சியிலிருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு காலை 10.40 மணிக்கு பெங்களூரு சென்றடையும். விமானம் (6 இ 7738) மாலை 5.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும். இந்த விமானம் மாலை 6.50 மணிக்கு திருச்சியை அடையும். பின்னர் விமானம் 6 இ 7739 திருச்சியிலிருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.50 மணிக்கு பெங்களூரை அடையும். இந்த சேவையில் 74 இருக்கைகள் கொண்ட ஏடிஆர் விமானத்தை இண்டிகோ நிறுவனம் இயக்குகிறது.
அக்டோபர் 27 முதல் மீண்டும் சிங்கப்பூருக்கு விமானம் இயக்கப்படுகிறது. இதை மக்கள் வெகுவாக பாராட்டி வரவேற்கிறார்கள். "மக்கள் காலையில் பெங்களூருக்குச் சென்று மாலை திரும்பிவிடலாம் என்பதால் காலை விமானத்தை மீட்டெடுப்பது நல்லது" என்று மூத்த நரம்பியல் நிபுணரும் விமான நிலைய ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ.அலீம் குறிப்பிட்டார்.
அதோடு, அக்டோபர் 27 முதல் திருச்சியிலிருந்து ஹைதராபாத்திற்கு விமானங்களை இயக்குவதற்கான விமான நிறுவனத்தின் முடிவையும் அவர் வரவேற்றார். தவிர, திருச்சியிலிருந்து மும்பை மற்றும் புது தில்லிக்கு விமான சேவையை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு விமான நிறுவனத்தை அவர் கேட்டுக்கொண்டார். இங்குள்ள விமான நிறுவனத்தின் வட்டாரங்கள், தனியார் கேரியர் விரைவில் நகரத்திலிருந்து மேலும் ஒரு உள்நாட்டு இலக்கை இணைக்கும் என்பதைக் குறிக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.