Advertisment

ஜீவ சமாதி அடையப் போவதாக பரபரப்பு கிளப்பிய இருளப்பசாமி: விடிய விடிய விழித்திருந்த பக்தர்கள்

Irulappaswami's Jeeva samadhi: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாசாங்கரை கிராமத்தில் இருளப்பசாமி என்ற 80 வயது முதியவர் ஜீவ சமாதி அடையப் போவதாக கூறியதால் அங்கே ஆயிரக்கணக்கில் பக்தர்கள், பொதுமக்கள் திரண்டதால் இரவு முழுவதும் பரபரப்பு நிலவியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Irulappaswami's Jeeva samadhi: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாசாங்கரை கிராமத்தில் இருளப்பசாமி என்ற 80 வயது முதியவர் ஜீவ சமாதி அடையப் போவதாக கூறியதால் அங்கே ஆயிரக்கணக்கில் பக்தர்கள், பொதுமக்கள் திரண்டதால் இரவு முழுவதும் பரபரப்பு நிலவியது.

Advertisment

சிவகங்கை மாவட்டம், பாசாங்கரை கிராமத்தில் இருளப்பசாமி 80 வயது முதியவர். இவர் தன்னை சித்தர் என்று அறிவித்துக்கொண்டு ஆண்மீகப் பணிகளில் ஈடுபட்டுவந்துள்ளார். இந்நிலையில் இருளப்பசாமி நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் 5 மணிக்குள் ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்தார். அதற்கான ஏற்பாடுகளை அவருடைய பக்தர்கள் செய்திருந்தனர். இந்த செய்தி பரவியதால், நேற்று மதியம் முதல் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மட்டுமில்லாமல் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களிலிருந்து பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் வந்து அவரிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக குவிந்தனர்.

கோவில் பூசாரியாக திருநங்கை ரசிகா: நம்ம சென்னையில் தான்...

நேரம் செல்லச்செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாசாங்கரை கிராமத்தில் திரண்டதால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் காவல்துறையினரும் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், ஜீவசமாதி என்பது அவரை உயிருடன் அடக்கம் செய்வதாக இருந்தால் சட்டப்படி குற்றம் என்பதால் காவல்துறை தரப்பில் முன்னதாகவே ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதற்கு, இருளப்பசாமியின் உயிர் பிரிந்த பிறகுதான் அவர் கூறியபடி அடக்கம் செய்யப்படுவார் என்று ஏற்பாடு செய்திருந்த பக்தர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பாசாங்கரை கிராமத்தில் இருளப்பசாமி ஜீவசமாதி அடையும் நிகழ்வைக் காண வந்திருந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் விடிய விடிய கண்விழித்து பார்த்திருந்தனர். இருளப்பசாமியும் பக்தர்கள் சூழ ஜீவசமாதி அடைவதற்காக அமர்ந்திருந்தார். அப்போது, இருளப்பசாமி தனது ஜீவசமாதி முடிவை மாற்றி அறிவித்தார். தன்னுடைய பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும் அதனால், ஜீவசாமாதி அடையும் முடிவை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்தார். இருளப்பசாமியின் அறிவிப்பைத் தொடர்ந்து பக்தர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதன் மூலம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாசாங்கரை என்ற குக்கிராமத்தில் விடியவிடிய நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment