குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க குறைந்தது 2 ஆண்டுகள் ஆகும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ தலைவர் சோம்நாத் குலசேகரப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, குலசேகரப்பட்டினத்தில் நில ஆர்ஜித பணிகள் இன்னமும் முடிவடையவில்லை.
தமிழ்நாடு அரசு இஸ்ரோவுக்கு தேவையான நிலங்களை ஆர்ஜிதப்படுத்தி ஏற்கனவே ஒப்படைத்துள்ளது. இன்னும் நில ஆர்ஜித பணிகள் உள்ளன” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் குலசேகரப்பட்டினம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் எனக்கேள்வியெழுப்பினார்கள். அதற்குப் பதிலளித்த சோம்நாத், “அடுத்த இரு ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என நம்புவதாக தெரிவித்தார். மேலும் குலசேகரப்பட்டினத்தில் தனியார் ராக்கெட்டுகளும் ஏவப்படும் எனத் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/