Advertisment

நாளை எம்.எல்.ஏவாகும் தினகரன்: மீண்டும் வருமான வரித்துறை ரெய்டு!

சசிகலா உறவினர் கார்த்திகேயனுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
சசிகலா உறவினர் வீட்டில் ரெய்டு

சசிகலா உறவினர் கார்த்திகேயனுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமானவரி சோதனை இன்று நடைபெற்று வருகிறது. சென்னை அடையாறில் உள்ள கார்த்திகேயனின் இல்லம் உட்பட 6 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Advertisment

சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் 2வது முறையாக வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சசிகலா உறவினர் கார்த்திகேயனுக்கு சொந்தமான தாம்பரம் படப்பையில் உள்ள மிடாஸ் நிறுவனம், ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த நவம்பர் மாதம் சசிகலாவின் குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். ஒரே இடத்தில் கால் டாக்ஸிகளை புக் செய்துக் கொண்டு திருமண கோஷ்டி போல் வந்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சுமார் ஒரு வார காலத்துக்கு நடைபெற்ற இந்த சோதனை தினகரனின் புதுவை பண்ணை வீடு, சசிகலாவின் மகன் விவேக் ஜெயராமன், மகள் கிருஷ்ணப்பிரியா, விவேக்கின் மாமனார் பாஸ்கரன், திவாகரனுக்கு சொந்தமான கல்லூரிஸ மன்னார்குடி வீடு, கொடநாடு எஸ்டேட் என அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்றது. இதில் கணக்கில் வராத ரூ.1,700 கோடி மதிப்பிலான சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் அங்கிருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள்,நகைகள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர். இதை தொடர்ந்து போயஸ் கார்டனில் சசிகலா தங்கியிருந்த 4 அறைகளிலும், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தங்கியிருந்த ஒரு அறையிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, அங்கிருந்து ஒரு சிறிய வேன் அளவுக்கான பொருட்களையும், பென் டிரைவ், லேப்டாப்புகளையும் கொண்டு சென்றனர்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சோதனை செய்த போது, அவை பினாமி பெயர்களில் இருப்பதாகவும் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்த போது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதாகவும் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அதன் அடிப்படையில் இன்று சசிகலாவின் உறவினர்களின் வீடுகள், நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆர்கே நகர் தேர்தலில் டிடிவி. தினகரன் வெற்றி பெற்று நாளை மறுதினம் பொறுப்பேற்க உள்ள நிலையில், மீண்டும் வருமான வரி சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

It Raid Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment