காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அது தொடர்பான மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு சில கட்சிகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ள நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.