Advertisment

40 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்: இந்தி விவகாரத்தில் அன்றைய தமிழக ஆளுநர் குரானா கருத்து

40 ஆண்டுகளுக்கு முன்பு ஜனவரி 25, 1983-ல் இதே நாளில்: இந்தி விவகாரத்தில் மத்திய அரசு அளித்துள்ள உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என அன்றைய தமிழ்நாடு ஆளுநர் எஸ்.எல். குரானா வலியுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Akali-Centre Talks, Export Import, EXIM, Hindi In Tamil Nadu, Kapil Dev, India vs pakistan, Indian express 40 years ago

40 ஆண்டுகளுக்கு முன்பு ஜனவரி 25, 1983-ல் இதே நாளில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டுக் கூட்டத்தில் தனது முதல் உரையை ஆற்றிய தமிழ்நாடு ஆளுநர் எஸ்.எல். குரானா, ஆண்டு ஊதிய உயர்வுக்கு தகுதி பெற, ரயில்வே ஊழியர்கள் ஹிந்தி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற ரயில்வே நிர்வாகத்தின் வற்புத்தலைக் குறிப்பிட்டுப் பேசினார்.

Advertisment

40 ஆண்டுகளுக்கு முன்பு ஜனவரி 25, 1983-ல் இதே நாளில்: இந்தி விவகாரத்தில் மத்திய அரசு அளித்துள்ள உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் எஸ்.எல். குரானா வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் தனது முதல் உரையை நிகழ்த்திய குரானா, ரயில்வே ஊழியர்கள் இந்தி மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆண்டு ஊதிய உயர்வுக்கு தகுதி பெற வேண்டும் என்று வற்புத்தியதைக் குறிப்பிட்டு இந்தி விவகாரத்தில் மத்திய அரசு அளித்த உறுதிமொழியை மதிக்க வேண்டும் வலியுறுத்தினார். இவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தி திணிப்பாக இருந்ததோடு, மறைந்த ஜவஹர்லால் நேரு மற்றும் பிரதமர் இந்திரா காந்தி அளித்த உறுதிமொழிகளுக்கு முரணாக இருந்தது.

Republic Day Special Price | This limited offer gives you an annual subscription at Rs 999 along with added benefits. Click to see offer

அகாலி - மத்திய அரசு பேச்சுவார்த்தை: ஜனவரி 25, 1983-ல் மத்திய அரசு, அகாலிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இடையே நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் தீர்வு காணப்படும் என தெரிகிறது. பேச்சுவார்த்தையின் போக்கு விரைவில் ஒரு உடன்பாடு எட்டப்படலாம் என்பதைக் குறிக்கிறது. கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மூன்று தரப்பினரும் திருப்தி தெரிவித்தனர். முத்தரப்பு கூட்டத்திற்கு முன்னதாக, அமைச்சரவைக் குழு உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து முறைகள் குறித்து விவாதித்தனர்.

பாகிஸ்தான் vs கபில் தேவ்: ஜனவரி 25, 1983-ல் லாகூரில் பாகிஸ்தானுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக பாகிஸ்தான் 323 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முடாசர் நாசர் ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் எடுத்தார். கபில்தேவ் 85 ரன்கள் பாகிஸ்தான் அணியின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu India Hindi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment