Advertisment

M Karunanidhi Statue Opening: 'முன்பை விட இப்போது கலைஞர் அதிகம் தேவைப்படுகிறார்' - மு.க.ஸ்டாலின்

Karunanidhi Death Anniversary: மம்தா பானர்ஜி, புதுவை முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். மு.க.ஸ்டாலின் நன்றியுரையாற்றினர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kalaignar M Karunanidhi Statue Opening

Kalaignar M Karunanidhi Statue Opening

Kalaignar M Karunanidhi Statue Opening: கலைஞர் மு.கருணாநிதி சிலை திறப்பு மற்றும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிகழ்வில் கலந்துகொண்டு, சிலையை திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மம்தா, மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, புதுவை முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் உரையாற்றினார்கள்.

Advertisment

கலைஞர் கருணாநிதி மரணம் அடைந்து, ஓராண்டு ஆகிறது. அவரது முதலாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதி மிகவும் விரும்பி உலவிய இடம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் முரசொலி அலுவலகம். அங்கு கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.

முரசொலி வளாகத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா, அவரது முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று (ஆகஸ்ட் 7) நடைபெற்றது. மாலை 5 மணிக்கு இந்த சிலையை மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.

சிலை திறப்பு விழா முடிந்ததும், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் மாலை 5.30 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்கியது. இதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். முரசொலி ஆசிரியர் செல்வம் வரவேற்று பேசினார். மம்தா பானர்ஜி, புதுவை முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். மு.க.ஸ்டாலின் நன்றியுரையாற்றினர்.

Live Blog

Kalaignar M Karunanidhi Statue Opening: கலைஞர் கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னையில் குவிந்தனர்.

 



























Highlights

    19:34 (IST)07 Aug 2019

    இந்தியாவில் எந்த இயக்கத்திற்கும் கருணாநிதி போன்ற தலைவர் கிடையாது - மு.க.ஸ்டாலின்

    இறுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "இந்தியாவில் எந்த இயக்கத்திற்கும் கருணாநிதி போன்ற தலைவர் கிடையாது. அதனால் தான் அவருக்கு அண்ணா அறிவாலயத்தில் சிலை வைத்தோம். அவரது அண்ணன் ஊரான சேலத்தில் வைத்தோம். கலைஞர் தன இளமை வாழ்க்கையை அதிகம் கழித்த திருச்சியில் சிலை வைத்தோம்.. இன்னும் பல இடங்களில் வைப்போம். இப்போது அவரது மூத்த பிள்ளையான முரசொலியில் வைத்திருக்கிறோம். எல்லா இடங்களில் கலைஞர் நின்று கொண்டு கம்பீரமாக காட்சி அளிப்பார். ஆனால், முரசொலியில் அவர் உட்கார்ந்த நிலையில், கையில் அட்டையும், பேனாவும் கொண்டு எழுதுவது போல வடிவமைத்துள்ளோம். ஏனென்றால், இப்படி எழுதுவது தான் கலைஞருக்கு பிடிக்கும். 1000 வருடங்களில் அடைய வேண்டிய பெருமையை, கலைஞர் 100 வருடங்களில் அடைந்து விட்டார். முன்பை விட இப்போது தான் கலைஞர் அதிகம் தேவைப்படுகிறார்" என்றார்.

    19:14 (IST)07 Aug 2019

    ஜெய் பங்களா... ஜெய் தமிழகம்... - மமதா பானர்ஜி

    மேற்குவந்த முதல்வர் மமதா பானர்ஜி பேசுகையில், 'ஸ்டாலின் என மிகச் சரியாகத் தான் கருணாநிதி பெயர் வைத்திருக்கிறார். ஸ்டாலின் போரில் தீர்க்கமாக போராடக் கூடியவர். கருணாநிதி மறைந்துவிட்டாலும், அவர் நம் இதயத்தில் வாழ்கிறார். சர்வாதிகாரத்திற்கு எதிராக நாம் போராட வேண்டும். தமிழுக்கும், வங்கத்துக்கும் பெரிய தொலைவில்லை. சுபாஷ் சந்திர போஸ் நடந்தே தென்னகம் வந்திருக்கிறார். நீங்கள் உங்கள் மாநிலத்திற்கு என்ன தேவை என்பதில் தெளிவாக உள்ளீர்கள். அதற்காகவே நான் தமிழ் மக்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். 

    ஜெய் ஹிந்த்... ஜெய் பங்களா... என எப்போதும் சொல்வேன்.. இனி ஜெய் தமிழ் நாடு என்றும் சொல்வேன்

    18:55 (IST)07 Aug 2019

    ஒரே ஜாதி என்று சட்டம் இயற்ற தயாரா? - கி.வீரமணி

    ஒரே மொழி, ஒரே ரேஷன் என்று அமைக்க முயலும் மத்திய அரசு, ஒரே ஜாதி என்ற சட்டம் இயக்க தயாரா? என கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

    18:44 (IST)07 Aug 2019

    மிகவும் உணர்வுப்பூர்வமான நிகழ்ச்சி - கி.வீரமணி

    கி.வீரமணி பேசுகையில், "மிகவும் உணர்வுப்பூர்வமான நிகழ்ச்சி இது. கலைஞர் விட்ட பணிகளை மட்டுமில்லாது, சொல்லாத பணிகளையும் செய்யும் வெற்றி வீரராக ஸ்டாலின் திகழ்கிறார். கலைஞர் எப்படி எதிர் நீச்சல் போட்டாரோ, அது போல அவரது சிலையை திறக்க வைக்க மேற்குவங்கத்தில் இருந்து ஒரு எதிர்நீச்சல் வீராங்கனை மமதா பானர்ஜி வந்திருக்கிறார்" என்றார். 

    18:28 (IST)07 Aug 2019

    தமிழும், தமிழகமும் கருணாநிதியின் நினைவுச் சின்னம்

    "ராஜாஜி தொடங்கி எடப்பாடி வரை அரசியல் செய்தவர் கலைஞர் கருணாநிதி. கருணாநிதி அமேசான் நதி போல.. தமிழ்நாடும், தமிழும் தான் கருணாநிதியின் நினைவுச் சின்னம். ஆகஸ்ட் 15ம் தேதி அந்தந்த மாநிலங்களின் கோட்டைகளில் முதல்வர்கள் கொடி ஏற்ற அதிகாரம் பெற்றுக் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி" என்று கவிஞர் வைரமுத்து பேசியுள்ளார். 

    18:22 (IST)07 Aug 2019

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் - புதுச்சேரி முதல்வர்

    கருணாநிதி நினைவு தின பொதுக் கூட்டத்தில் தொடக்கவுரை ஆற்றிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, "கலைஞர் கருணாநிதியின் சாதனைகளை பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். 2021ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என விரும்புகிறேன். அப்போது மு.க.ஸ்டாலினின் ஆட்சி அமைய வேண்டும்" என்றார். 

    18:13 (IST)07 Aug 2019

    திமுக முன்னாள் எம்எல்ஏ உசேன் மறைவுக்கு மவுன அஞ்சலி

    சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் கருணாநிதியின் ஓராண்டு நினைவு தின கூட்டம் நடைபெறுகிறது. திமுக நிர்வாகிகள், தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். திமுக முன்னாள் எம்எல்ஏ உசேன் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    18:04 (IST)07 Aug 2019

    தலைவர்களுக்கு சிறப்பு பரிசு

    கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ள தலைவர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு அரங்கேறி வருகிறது. ஸ்டாலின், மமதா, கி.வீரமணி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பலருக்கு சிறப்பு பரிசுகள் அளிக்கப்பட்டு வருகிறது. 

    publive-image

    17:54 (IST)07 Aug 2019

    பொதுக் கூட்ட மேடையில் ஸ்டாலின், மமதா

    கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலைத் திறப்பு பொதுக்கூட்டம் லைவ்...

    17:42 (IST)07 Aug 2019

    கருணாநிதி நினைவிடத்தில் மமதா மரியாதை

    சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

    17:09 (IST)07 Aug 2019

    கருணாநிதியின் உருவச் சிலை திறப்பு லைவ்

    சென்னை முரசொலி அலுவலகத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச் சிலைத் திறப்பு நிகழ்வை காண,

    17:05 (IST)07 Aug 2019

    Karunanidhi statue Opening Ceremony : சிலை திறந்து வைத்த மமதா பானர்ஜி

    சென்னை முரசொலி அளிவலகத்தில் கலைஞர் கருணாநிதியின் சிலையை மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜி திறந்து வைத்தார். 

    Karunanidhi Death Anniversary: கலைஞர் கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று (ஆகஸ்ட் 7) காலையில் சென்னையில் அண்ணா சாலை அண்ணா சிலை அருகேயிருந்து, கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடம் வரை திமுக.வினர் அமைதிப் பேரணி நடத்தினர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின், கனிமொழி இணைந்து மரக்கன்று நட்டனர். நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் திரளாக கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

     

    Mk Stalin Dmk M Karunanidhi Mamata Banerjee
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment