Advertisment

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் : 5 பேருக்கு ஒருநாள் சிபிசிஐடி காவல்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர் உட்பட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் விதிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் : 5 பேருக்கு ஒருநாள் சிபிசிஐடி காவல்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர்  உட்பட 5 பேருக்கு ஒரு நாள்  சிபிசிஐடி காவல் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் அவரது மரணத்தில் மர்மம் இருப்பது தொடர்பாக எழுந்த சந்தேகத்தில் நீதி கேட்டு போராட்டம் நடத்தப்பட்டது. மாணவியின் உடலை பெற்றோர்கள் வாங்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் போராட்டத்தின் 4 வது நாளில் எதிர்பாரதவிதமாக கலகம் வெடித்தது. இதனால் பள்ளியின் சொத்துக்கள் தாக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பெயரில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளியின் தாளாளர்  உட்பட 5 பேர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க நேற்று விழுப்புரத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் மனு அளித்தனர். அந்த மனு மீதனா விசாரணை இன்று நடைபெற்றபோது, 5 பேரை ஒரு நாள் விசாரிக்க அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment