இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும், பாரத் ஜோடோ யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கிறார் என்ற செய்தி வெளியானது.
சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். ஆலொசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் கமல்ஹாசன் செதியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஒரு மணிநேரமாக ஆலோசனை நடைபெற்றது. அப்போது எது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. கட்சி கட்டமைப்பு, பூத் கமிட்டி 2024 தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் போன்றவை பேசப்பட்டன. ஒரு முக்கிய பயணத்துக்கான முன்னேற்பாடு செய்யபட்டிருக்கிறது. அதைப் பற்றி அவர்கள் (கட்சியினர்) சொல்வார்கள். நான் அடுத்த வேலைக்கு செல்ல வேண்டும்.
நான் எந்தப் பாதையை நோக்கிச் செல்கிறேன் என்பது உங்களுக்கு புரிய வரும். எனது பயணத்தைப் புரிந்துகொண்டாலே அது உங்களுக்கு புரிய வரும்.” என்று கூறினார்.
ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் கமல்ஹாசனிடம் கருத்து கேட்டனர். ஆவின் குறித்து தனது கட்சியில் உள்ள ஒருவர் பதிலளிப்பார் என்று கூறினார். மேலும், எந்த ஒரு பொருட்களின் விலையையும் இப்படி உடனடியாக உயர்த்தக் கூடாது. அதுவும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தக் கூடாது என்று கூறினார்.
தீபிகா படுகோன் ஆடையை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள் அதைப் பற்றி தங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “அது நம்ம அரசியல் இல்லை” என்று கூறினார்.
ஆர்.டி.ஐ தொடர்பாக மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தீர்கள் பதில் வந்ததா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, 2 மணி நேரத்தில் நாங்கள் கேட்டது நடந்துவிட்டது என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"