Advertisment

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: 18 கிராம மக்கள் பேரணி; அதிகாரிகள் பேச்சுவார்த்தை

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏக்னாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பாரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.

author-image
WebDesk
New Update
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: 18 கிராம மக்கள் பேரணி; அதிகாரிகள் பேச்சுவார்த்தை

கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு, வாயை கறுப்புத் துணியால் மூடிக்கொண்டு, விமான நிலையம் அமைப்பதற்காக விவசாய நிலங்களை அரசு பறிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏக்னாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பாரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.

Advertisment

கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு, வாயை கறுப்புத் துணியால் மூடிக்கொண்டு, விமான நிலையம் அமைப்பதற்காக விவசாய நிலங்களை அரசு பறிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.

publive-image

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்க, ஏக்னாபுரம் மற்றும் 12 கிராமங்களை தேர்வு செய்ததற்காக 140 நாட்களுக்கும் மேலாக அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் அவ்விடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டன.

அவர்களது கிராமத்தில் இருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர், தாசில்தார் உள்ளிட்டோர் தங்களது பிரதிநிதிகளிடம் பேசி போராட்டத்தை நிறுத்துமாறு வலியுறுத்தினர்.

நாளை தலைமைச் செயலகத்தில் மாநில அமைச்சர்களை சந்திக்க ஏற்பாடு செய்வதாக ஆட்சியர் அலுவலகம் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பேரணியை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகத் தெரிவித்தனர். இருப்பினும் மாலையில் அமைதியான முறையில் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஏக்னாபுரத்தில் உள்ள மக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தினமும் போராட்டங்களை நடத்தி வந்தனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டம் 145வது நாளை எட்டியது.

20,000 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு பரந்தூரில் விமான நிலையம் கட்டவுள்ளது. மெகா விமான நிலையத்தை கட்டுவதற்காக 4,563.56 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்றும், 1,005 குடும்பங்கள் பாதிக்கப்படும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.

13 கிராமங்களில் உள்ள நிலங்களுக்கு 3.5 மடங்கு சந்தை மதிப்பை அரசு வழங்கியது. இருப்பினும், அரசாங்கம் எவ்வளவு தொகை அல்லது வேறு எந்த மாற்று நிலம் வழங்கினாலும், தங்கள் பூர்வீக நிலம் மற்றும் வீடுகளை இழக்க விரும்பவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Airport Chennai Airport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment