திமுகவிலும் ஒரு ஷிண்டே உருவாகலாம், அது கனிமொழியாக கூட இருக்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் சி.வி. சண்முகம் பேசினார். ” திமுக தனது கையாளாக பன்னீர் செல்வத்தை பயன்படுத்துகிறது. ஏற்கனவே இரட்டை இலை சின்னத்தை முடக்கியதுபோல இம்முறையும் முடக்க அவர் முயறிச்சிக்கிறார். சிவசேனாவை இரண்டாகப் பிரித்த ஏக்நாத் ஷிண்டே போல திமுகவிலும் ஒரு ஷீண்டே வெளியே உருவாகுவார். அது கனிமொழியாகவோ, துரைமுருகனாகவோ இருக்கலாம் “ என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. ஜி.கே.வாசன் அதிமுகவின் இ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பாஜக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளது குறிப்பிடதக்கது.